Previous
Next

கௌரவ சபாநாயகி அவர்களின் செய்தி

,yq;if mZrf;jp rig (SLAEB)

பேராசிரியர் துஷாரா ரத்நாயக்க அம்மையார்

கௌரவ தலைவரின் செய்தி

"mZ tpQ;Qhdk;; kw;Wk; njhopy;El;gj;Jld; ,yq;ifaHfSf;F rpwe;j vjpHfhyj;ij cUthf;Fjy"

1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை அணுசக்தி சபை (SLAEB), நிலையான அபிவிருத்திக்காக அணுவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் செயற்படும் இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். தேசிய அபிவிருத்திக்காக விஞ்ஞான நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு, உணவு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் அணுத்தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை மேம்படுத்துவதில் SLAEB முக்கிய பங்காற்றுகிறது.

இலங்கை காமா மையத்தை (SLGC) நிறுவுதல், தேசிய அழிவில்லாத பரிசோதனை மையத்தை (NCNDT) அமைத்தல், கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை உற்பத்தி செய்தல் மற்றும் வலுவான பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு கலாசாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை SLAEB இன் முக்கிய சாதனைகளில் அடங்குகின்றன. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் தேசிய தேவைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கதிர்வீச்சுத் தொழில்நுட்பத் தீர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் மூலோபாயக் கொள்கைகளுக்கு இணங்க, SLAEB மருத்துவ சைக்ளோட்ரோன் வசதி மற்றும் X-கதிர் கதிர்வீச்சேற்றும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பயன்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் முதன்மையான முன்னுரிமையாகக் காணப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அபிவிருத்திக்கு பங்களித்து வரும் SLAEB, பாதுகாப்பு, கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சிறப்புத் திறன் ஆகிய துறைகளில் புதிய தரநிலைகளை தொடர்ந்து நிறுவி வருகிறது. சமூகத்தின் நலனுக்காக நம்பகமான அணுவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதே SLAEB இன் தொடர்ச்சியான நோக்கமாகும்.